Aram

சமூக அறக்கட்டளை நலத்திட்டமும்

மேலும் குழந்தைகளை மகிழ்விக்கும் வகையில் நடனம், மேஜிக் ஷோ, போன்ற கலை நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிட்டுள்ளோம்..

பத்திரிகையாளர்களின் குழந்தைகள் நலத்திட்டமும், பெண்கள் நலன் மேம்பாட்டு சிறப்பு நிகழ்ச்சியுமான இதில் தாங்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என நாங்கள் ஆசைப்படுகிறோம்.

எனவே, தாங்கள் வருகின்ற 10ஆம் தேதி [10.09.2023) அன்று மாலை நடைப்பெறும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்பிக்க தங்களின் பொன்னான நேரத்தில் சில மணித்துளிகளை ஒதுக்கி தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறோம்.

அறம் பெண்களுக்கான தன்னம்பிக்கை கூடமாக செயல்படுகிறது.

கடந்த 2015 டிசம்பரில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தின் போது அம்பத்தூர் அருகே உள்ள மண்ணூர்பேட்டை மற்றும் கொரட்டூர் பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சுமார் 200 மேற்பட்ட நபர்கள் எங்கள் நண்பர்கள் குழாவல் தனியார் பள்ளியில் சுமார் 20 நாட்கள் வரை பாரமரிக்கப்பட்டனர். அவர்களில் பலர் எங்கள் பகுதியில் உள்ள ஆடை தொழிற்சாலைகளில் சொற்ப சம்பளத்திற்கு வேலை பார்த்து வந்தனர்.சரியாக தையல் கலை தெரியாத காரணத்தால் அவர்கள் சொற்ப சம்பளத்திலும், தையல் கலை தெரிந்தவர்கள் ஓரளவிற்கு நல்ல சம்பளத்தில் பணியாற்றியதை அறிந்தோம்.

Leave A Comment

Your Comment
All comments are held for moderation.

×